வரிசையாக வெளிநாட்டு மருத்துவர்கள்; தொடர்ந்து நடக்கும் சிகிச்சை; அறிக்கை வெளியிடாத அப்பல்லோ
ஜெயலலிதாவிற்கு கடந்த மூன்று நாட்களாக சிங்கப்பூர் பிசியோதெரபி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் மீண்டும் சிகிச்சை அளிக்க லண்டன் டாக்டர் அப்பல்லோவிற்கு வர உள்ளார். ஆனால் இதுகுறித்து அப்பல்லோ எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எய்ம்ஸ் மருத்துவர்கள், லண்டன் மருத்துவர் மற்றும் சிங்கப்பூர் மருத்துவர்கள் என பல பேர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த மூன்று நாட்களாக சிங்கப்பூரில் இருந்து வந்த பிசியோதெரபி மருத்துவர்கள் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்து வந்தனர். தற்போது அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதோடு இன்னும் 4 நாட்களில் லண்டன் மருத்துவர் மீண்டும் அப்பல்லோவிற்கு வர உள்ளார். அவர் வந்து ஜெயலலிதாவின் உடல்நிலையை பரிசோதித்த பிறகு, ஜெயலலிதா டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆனால் இதுதொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை எந்த தகவலும் வெளியிடவில்லை.