உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் - ஜி.ராமகிருஷ்ணன்
உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றிக்கு வாய்ப்பு உள்ள இடங்களில் போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:-
“உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிக்கு வாய்ப்புள்ள இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிடும். கோவை மேயர் வேட்பாளராக மாவட்ட செயற்குழு உறுப்பினர் பத்மநாபன் தேர்வு செய்யப்பட்டார்.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதுக்கு எதிர்க்கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் போதிய அவகாசம் தரவில்லை. காங்கிரஸ் கொள்கையையே பாஜக அரசும் பின்பற்றி வருகிறது“ என்று அவர் தெரிவித்தார்.