1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (23:08 IST)

"கற்போம் எழுதுவோம்"_ மதிப்பீட்டு முகாம்

"கற்போம் எழுதுவோம்"_ மதிப்பீட்டு முகாம் மணவாசி பள்ளி மையத்தில்  நடைப்பெற்றது. இம்முகாமில் திருநங்கைகள் 4 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு வாசித்தல்,எழுதுதல், எண்ணறிதல் போன்றவை மதீப்பீடு செய்யப்பட்டது.

இம்முகாமை மாவட்ட உதவித்திட்ட அலுவலர் திரு மகாலிங்கம், கிருஷ்ணராயபுரம் வட்டார கல்வி அலுவலர் திரு பழனிச்சாமி,மாவட்ட ஒருங்கிணைந்த கல்வி ஒருங்கிணைப்பாளர் திருமதி பாண்டீஸ்வரி,வட்டார வளமைய  மேற்பார்வையாளர் ( பொ) திரு செல்வகுமார்,ஆசிரிய பயிற்றுநர்கள்   திருமதி சத்தியவதி, திருமதி ரேவதி ஆகியோர் பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி தேன்மொழி ,பட்டதாரி  ஆசிரியர் தர்மராஜ்,கல்யாணி , வெண்ணிலா ஆகியோர் செய்திருந்தனர்.