நடிகை குஷ்பு கலக்கும் காங்கிரஸ் கட்சி மாநாடு
அக்டோபர் 17ஆம் தேதி அன்று, தூக்குடியில் காங்கிரஸ் கட்சியின் தென்மண்டல நிர்வாகிகள் மாநாட்டில், குஷ்பு சுந்தர் கலந்து கொள்கிறார்.
தூத்துக்குடியில் அக்டோபர் 17 ஆம் தேதி அன்று காங்கிரஸ் கட்சியின் தென்மண்டல நிர்வாகிகள் மாநாடு நடைபெறுகிறது. இதில் அகில இந்திய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு பங்கு கொள்கிறார்.
இது குறித்து, தூத்துக்குடியில், முன்னாள் மத்திய இணை அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடியில் அக்டோபர் 17 ஆம் தேதி அன்று காங்கிரஸ் கட்சியின் தென்மண்டல நிர்வாகிகள் மாநாடு தூத்துக்குடி ஏவிஎம் கமலவேல் மகாலில் நடைபெறுகிறது. இந்த மாநாடிற்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமை வகிக்கிறார். சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் முகுல்வாஸ்னிக், அகில இந்திய செயலாளர் திருநாவுக்கரசு அகில இந்திய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கிறார் என்றார்.