வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 13 ஜனவரி 2020 (12:53 IST)

கும்பகோணம் பாலியல் வழக்கு; 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கடந்த 2018 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் டெல்லியை சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 பேருக்கு மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழ்ங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் டெல்லியில் இருந்து வங்கியில் பயிற்சிக்காக வந்த 23 வயது பெண், 4 பேர் கொண்ட கும்பலால் ஆட்டோவில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கில் தஞ்சை மகளிர் நீதிமன்றம், தினேஷ், புருசோத்தமன், வசந்த், அன்பரசன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.