1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 28 ஏப்ரல் 2022 (11:30 IST)

கொடநாடு வழக்கை விசாரித்து வரும் முக்கிய அதிகாரி திடீர் இட மாற்றம்!

kodanadu
கொடநாடு வழக்கை விசாரித்து வரும் முக்கிய அதிகாரி திடீர் இட மாற்றம்!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு தனிப்படை போலீசார் விசாரணை செய்யப்பட்டு வருகிறது
 
 இந்த நிலையில் இந்த வழக்கை விசாரணை செய்யும் குழுவில் முக்கிய அதிகாரியாக இருக்கும் டிஎஸ்பி சுரேஷ் என்பவர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
அவருக்கு பதிலாக டிஎஸ்பி சந்திரசேகர் என்பவர் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது 
 
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வரும் முக்கிய அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது