1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 11 டிசம்பர் 2018 (19:41 IST)

ரஜினியை தொடர்ந்து பாஜகவின் காலை வாறிய கமல்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராஜஸ்தான், மத்திடபிரதேசம், மிசோரம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற்று இன்று வாக்கு எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன.
 
தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் ஆட்சி அமைக்க உள்ளார். மீதமுள்ள 4 மாநிலங்களில் மிசோரமில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது. இதில் மிசோ தேசிய கட்சி வெற்றி பெற்றுள்ளது.
 
மீதமுள்ள 3 மாநிலங்களில் பாஜகவை விட காங்கிரஸ் கை ஓங்கியே இருந்தது. தற்போது சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறும் என தெரிகிறது. 
 
பாஜகவிற்கு இது பெரும் அடியாக உள்ளது. ரஜினி பாஜக தனது செல்வாக்கை இழந்து விட்டதாக கருத்து தெரிவித்திருந்தார். அந்த வலையில், தற்போது கமல்ஹாசன் டிவிட்டரில் புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம். மக்கள் தீர்ப்பு இது என பதிவிட்டுள்ளார்.