உளவுத்துறை தலைவராக கே.என்.சத்தியமூர்த்தி மீண்டும் நியமனம்
உளவுத்துறை தலைவராக கே.என்.சத்தியமூர்த்தி மீண்டும் நியமனம்
தமிழக உளவுத்துறை ஐஜியாக கே.என்.சத்தியமூர்த்தி மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஆளும் கட்சிக்கு ஆதரவாக உள்ள காவல்துறை மற்றும் மாவட்ட கலெக்டர் போன்ற உயர் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் மாற்றியது. இதில், தமிழக உளவுத்துறை ஐஜியான கே.என்.சத்தியமூர்த்தியும் தப்பிவில்லை.
தேர்தல் முடிந்து, ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற பின்பு, தமிழக உளவுத்துறை ஐஜியாக கே.என்.சத்தியமூர்த்தி மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமான அதிகாரிகளுள் கே.என்.சத்தியமூர்த்தியும் ஒருவர். மேலும், அதிமுக வெற்றிக்கு இவரது பங்களிப்பும் ஒரு முக்கிய காரணம் என அரசியல் வட்டாரத்தில் பேச்சு உலாவுகிறது.