செவ்வாய், 8 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : புதன், 3 ஆகஸ்ட் 2016 (17:08 IST)

திமுகவினரை கிண்டல் அடித்த ஜெயலலிதா: விளையாட தெரியாமல் சேம் சைடு கோல் போடுபவர்கள்!

தமிழக சட்டசபையில் இன்று பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுகவினர் பேசுவது கால்பந்து விளையாட்டில் விளையாட தெரியாமல் தொடர்ந்து  சேம்சைடு கோல் போடுவது போல் உள்ளது என்று கிண்டலடித்தார்.


 
 
சட்டசபையில் இன்று பேசிய திமுக உறுப்பினர் ரங்கநாதன்  தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றுவோம் என கூறிய ஜெயலலிதா, தற்போது மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கி வருவதாக குற்றம் சாட்டினார்.
 
இதற்கு பதில் அளித்த பேசிய முதல்வர் ஜெயலலிதா, திமுக ஆட்சியின் இருட்டிலிருந்து தமிழகத்திற்கு வெளிச்சமூட்டியது அதிமுக அரசு தான். தமிழகம் மின்மிகை மாநிலம் என்பது மாய தோற்றமில்லை, உண்மைத் தோற்றம்.
 
மத்திய மின்சாரம் வாரியம் தமிழகத்தை மின் உபரி மாநிலமாக அறிவித்துள்ளது. திமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தபடியே தனியாரிடம் மின்சாரம் வாங்கப்படுகிறது. உண்மை தெரியாமல் திமுகவினர் பேசுவது, கால்பந்து விளையாட்டில் விளையாட தெரியாமல் தொடர்ந்து  சேம்சைடு கோல் போடுவது போல் உள்ளது என கிண்டலடித்தார்.