வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : செவ்வாய், 4 அக்டோபர் 2016 (13:52 IST)

வாட்ஸ் ஆப்பில் ஜெயலலிதா குரல்: விஷமிகள் விளையாட்டு!

வாட்ஸ் ஆப்பில் ஜெயலலிதா குரல்: விஷமிகள் விளையாட்டு!

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த 10 நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகளை பரப்பி வருகின்றனர் விஷமிகள்.


 
 
இந்நிலையில் வந்தந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அவரது புகைப்படம் அல்லது அவரது வாட்ஸ் ஆப் குரலை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது. இதனையடுத்து இதனையும் விஷமிகள் கையில் எடுத்து வாட்ஸ் ஆப்பில் ஜெயலலிதா பேசுவது போல், அவரது தொணியில் பேசி ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
 
அந்த ஆடியோவில் அவரது குரலில் சிறிதளவு மாற்றம் தெரிந்தாலும், ஜெயலலிதா பேசுவது போல் அதே தொணியில் பேசியுள்ளனர். இந்த ஆடியோ போலியானது, அது முதல்வர் ஜெயலலிதாவின் குரல் என தெரியாதவர்கள் முதல்வரின் குரல் என மற்றவர்களுக்கும் அனுப்ப ஆரம்பித்துள்ளனர். இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 
அந்த ஆடியோவில் பேசி இருப்பது, என் அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய என்னை வாழவைத்து கொண்டிருக்கும் அன்பு தெய்வங்களாகிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்! நான் உங்கள் அன்பு அம்மா ஜெயலலிதா பேசுகிறேன்.
 
என் உடல்நலம் கருதி எனக்காக மனமுருகி பிரார்த்தனை செய்துகொண்டிருக்கும் நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அன்பிற்கு மட்டும் சொந்தமாகிய என்னை கடவுள் நல்ல உடல்நலத்துடனே வைத்திருக்கிறார்.

நன்றி: Funnett News
 
சிறிது ஓய்வெடுத்தபிறகு உங்கள் முன்னால் தோன்றி, விளக்கம் அளிக்கக்கூடிய அளவிற்கு திடமான உடல் நலத்துடன் ஆண்டவன் எனக்கு ஆசீர்வாதம் அளித்திருக்கிறார். ஆக, தேவையில்லாத வதந்தியை யாரும் நம்பவேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
 
அதிமுகவின் அசுரவளர்ச்சி, அரசின் அமைதியான ஆட்சி நடத்தை இவை எல்லாம் சூட்சமக்காரர்களுக்கு வேதனைத்தர எனது சாதாரண உடல்நலக்குறைவு அவர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்து விட்டது. ஆகவே, இதுபோன்ற நாகரிகமில்லாத வதந்திகளை பரப்புகிறார்கள். கோடிக்கணக்கான மக்களின் ஆசீர்வாதமும், இதய தெய்வம் புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தமான அன்பு உடன்பிறப்புகளின் அன்பும் எனக்கு இருக்கும்போது உங்களைவிட்டு என்னை யாராலும் பிரிக்க முடியாது.
 
நான் ஏற்கனவே சொன்னதுபோல், உங்களுக்காகவே நான் - உங்களாலேயே நான் எனவே, சட்டசபை தேர்தலில் எப்படி அதிமுகவை வெற்றியடையச் செய்தீர்களோ, அதேபோல் வருகிற அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி, 17-ஆம் தேதி அன்று நடைபெற இருக்கக்கூடிய உள்ளாட்சி தேர்தலிலும், இரட்டை இலை சின்னத்திற்கு உங்கள் மேலான வாக்குகளை தந்து பெருவாரியான வெற்றிகளை தரவேண்டும் என்று கேட்டு, வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். அண்ணா நாமம் வாழ்க! புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நாமம் வாழ்க! நன்றி! வணக்கம்!! என அந்த ஆடியோவில் பேசப்பட்டுள்ளது.