கிருஷ்ணகிரி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட, ஜெயலலிதா உத்தரவு
முதல் போகப் பாசனத்திற்காக கிருஷ்ணகிரி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட, தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது
கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்குக் கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, கிருஷ்ணகிரி அணையின் வலது மற்றும் இடதுபுறக் கால்வாய்களிலிருந்து முதல் போக பாசனத்திற்காக 12.7.2014 முதல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.
இதனால், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள 9,012 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.