1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Modified: செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (11:24 IST)

மயானத்தில் பணிபுரியும் பெண்ணுக்கு கல்பனா சாவ்லா விருது: ஜெயலலிதா கவுரவம்

மயானத்தில் பணிபுரியும் பெண்ணுக்கு கல்பனா சாவ்லா விருது: ஜெயலலிதா கவுரவம்

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், பல்வேறு துறைகளில் சாதனை படைப்போருக்கு விருதுகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.


 

அதில், நாமக்கல் மாவட்டத்தில் எரியூட்டும் மின் மயானத்தில் பணிபுரியும் ஜெயந்திக்கு (40), துணிவு-சாகசச் செயலுக்கான விருது, ரூ.5 லட்சம் காசோலை, சான்றிதழ், தங்க முலாம் பூசப்பட்ட ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள தங்கப் பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டன.

மேலும் பலர் தங்கள் துறையில் சாதித்தமைக்காக முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து விருதுகள் பெற்றனர்.