வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.vadivel
Last Modified: செவ்வாய், 13 அக்டோபர் 2015 (21:48 IST)

அமைச்சர்களுடன் ஜெயலலிதா திடீர் ஆலோசனை

தமிழக அமைச்சர்களுடன் முதல்வர் ஜெயலலிதா, தனது போயஸ் இல்லத்தில் திடீர் ஆலோசனை நடத்தினார்.
 

 
அதிமுக புதிய மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதனையடுத்து, சென்னை போயஸ் கார்டனில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தில் திடீர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் தவறாமல் கலந்து கொண்டனர்.
 
இந்த கூட்டத்தில், சட்ட மன்ற தேர்தலுக்கு அதிமுக தயாராவது குறித்தும், உலக முதலீட்டாளர் மாநாட்டில் வந்துள்ள முதலீடுகள் குறித்தும், மேலும் சில முக்கிய ஆலோசனை நடைபெற்றதாக அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
 
முதல்வர் ஜெயலலிதா நாளை கொடநாடு செல்ல உள்ள நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.