1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 30 ஜனவரி 2015 (14:52 IST)

"ஜெயந்தி நடராஜன் காங்கிரஸிலிந்து விலகியது நன்மைக்கே" - ஈவிகேஎஸ் இளங்கோவன் பதிலடி

ஜெயந்தி நடராஜன் விலகியது காங்கிரஸ் கட்சிக்கு நன்மை தான் என்று அக்கட்சியின் மாநில தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் ஜெயந்தி நடராஜனின் தாத்தாவும், தமிழக முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் மீது இளங்கோவன் கடும் புகார் தெரிவித்தார். 1967 தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பக்தவத்சலமே காரணம் என்று புகார் தெரிவித்தார்.
 
தமிழகத்தில் பஞ்சம் தலைவிரித்தாடிய போது அரிசியை கிடங்கில் பதுக்கியவர் பக்தவத்சலம் என்று இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார். காமராஜரின் நற்காரியங்கள் பக்தவத்சலம் ஆட்சியால் வீணாகி போனதாகவும் இளங்கோவன் கூறியுள்ளார்.