1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 22 நவம்பர் 2016 (16:01 IST)

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கனமழை - வானிலை மையம் அறிவிப்பு

தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.


 

 
தமிழகத்தில் வழக்கமாக வருடா வருடம் பெய்யும் வட கிழக்கு பருவமழை இந்த வருடம் இதுவரை பெய்யவில்லை. கடந்த அக்டோபர் மாதம் 30ம் தேதி தொடங்கிய மழை 2 நாட்கள் மட்டுமே பெய்தது. 
 
அதன் பின் மழை இல்லாததால், விவசாயிகள் தங்கள் பயிர்களை எண்ணி கலக்கத்தில் உள்ளனர்.
 
ஆனால், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இந்திய பெருங்கடலில் ஏற்பட்டுள்ல குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக,  தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. 
 
இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.