1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 24 பிப்ரவரி 2020 (18:34 IST)

வேளாண் மண்டலத்தில் தொழில் தொடங்க தடை.. அரசிதழில் வெளியீடு

வேளாண் மண்டல சட்டத்தில் குறிப்பிட்ட தொழில்கள் தொடங்க தடை விதிக்கப்பட்டது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சமீபத்தில் சட்டப்பேரவையில் வேளாண் மண்டல சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் வேளாண் மண்டல சட்டத்தில் குறிப்பிட்ட தொழில்கள் தொடங்க தடை விதிக்கப்பட்டது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் தடை விதிக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.