1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 8 பிப்ரவரி 2017 (15:43 IST)

ஜெ. விஷம் கொடுத்து கொல்லப்பட்டாரா? ஆதாரத்தை வெளியிடும் இந்தியா டுடே: பி.எச்.பாண்டியன் பேட்டி

ஜெயலலிதா விஷம் கொடுத்து கொல்லப்பட்டார் என்பதை நிரூபிக்கும் ஆதாரங்களை இந்தியா டுடே பத்திரிக்கை சற்று நேரத்தில் வெளியிட உள்ளதாக பி.எச்.பாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.


 


ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். டிசம்பர் 5ஆம் தேதி அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை அறிவித்தது.

இந்த 75 நாட்கள் ஜெயலலிதா பெற்று வந்த சிகிச்சை குறித்து இன்று வரை தெளிவான தகவல்கள் இல்லாமல் வதந்தி பரவி வருகிறது. இந்நிலையில் நேற்று அதிமுக அமைச்சர் பி.எச்.பாண்டியன் செய்தியாளர்கள் சந்திப்பில், சசிகலா ஜெயலலிதாவுக்கு விஷம் வைத்து கொலை செய்தார் என்றார். இதையடுத்து நேற்று இரவு சசிகலாவுக்கு எதிராக பன்னீர்செல்வம் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

தற்போது ஜெயலலிதா விஷம் கொடுத்து கொல்லப்பட்டார் என்பதை நிரூபிக்கும் ஆதாரங்களை இந்தியா டுடே பத்திரிக்கை சற்று நேரத்தில் வெளியிட உள்ளதாக பி.எச்.பாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.