வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : திங்கள், 6 ஜூலை 2020 (16:35 IST)

’’இப்படி செய்தால் தான் ’’இனிமேல் பெட்ரோல், டீசல் வழங்கப்படும் - தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் !

தமிழகத்தில் கொரொனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் மக்களை கொரொனா தாக்குதலில் இருந்து பாதுகாக்க அரசு தீவிர முயற்சிகள் எடுத்து துரிதமாகச் செயல்பட்டு வருகிறது.

இந்தியாவில் கொரொனா பாதிப்பு 6 லட்சத்தைக் கடந்துள்ளது. தமிழகத்தில் 1 லட்சம் என்ற எண்ணிக்கையைத் தாண்டியுள்ளது.

வரும் ஜூலை  30 வரை தமிழகத்தில் 5 மாவடங்களில் முழு ஊரடங்கு உள்ள நிலையில் மற்ற மாவட்டங்களில் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளின்படி ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இன்றிலிருந்து சென்னையில் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் சாலையில் வாகனங்கள் அதிகளவில் சென்றதையும், கடைகளில் மக்கள் கூட்டமாகச் செல்வதைப் பார்க்க முடிந்தது.

இந்நிலை தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம், இன்று முதல் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வந்தால் தான் பெட்ரோல், டீசல் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

மேலும், தமிழ் நாடு பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில்  வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,  எண்ணெய் நிறுவங்கள் சார்பில் பெட்ரோல் பங்குகளில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டம என அறிவுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.