வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 21 டிசம்பர் 2018 (13:17 IST)

மக்களில் ஒருவராக பணியாற்றுவேன் : மு.க. ஸ்டாலின்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வழியில் திமுக கட்சியை திறம்பட வழி நடத்திச் சென்று கொண்டிருக்கிறார் முக ஸ்டாலின். சில நாட்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பேசிய ஸ்டாலின்  ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவேன் என்று சூளுரைத்தார். ஆனால் அவரது பேச்சுக்கு யாரும் ஆதரவு அளிக்கவில்லை என்று தெரிகிறது.
இந்நிலையில் தன் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட கொளத்தூர் தொகுதிக்கு சென்ற ஸ்டாலின், பெரியார் நகரில் உள்ள திருமண மண்டபத்தில்  நடைபெற்ற கிருஸ்துமஸ் விழாவில் பங்கேற்றார். இவ்விழாவில் மக்களுக்கு கிருஸ்துமஸ் பரிசுப் பொருட்களை வழங்கினார்.
 
அப்போது  ஸ்டாலின் கூறியதாவது, மக்கள் பணியாற்றுவதற்காக மக்கள் தொடர்ந்து எனக்கு வாய்ப்பை வழங்கி வருகின்றனர். முதல்வராக மட்டுமின்றி எந்தபொறுப்பிற்கு வந்தாலும் நன் மக்களில் ஒருவராக இருந்து பணியாற்றுவேன்.மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள இரண்டு ஆட்சிகளையும் ஒழித்தால்தான் நாடு வளம்பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.