1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 7 அக்டோபர் 2015 (17:59 IST)

நான் எந்த குற்றமும் செய்யவில்லை என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன் : அன்புமணி ராமதாஸ்

கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி வழங்கிய வழக்கில், தான் எந்த தவறும் செய்யவில்லை என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்  
 
ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்கட்டமைப்பு இல்லாத நிலையில் இரண்டு கல்லூரிக்கு அனுமதி தந்ததாக அன்புமணி மீது சிபிஐ குற்றச்சாட்டியது. இரண்டு மருத்துவ கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி வழங்கிய வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது.
 
இந்நிலையில் மோசடி உள்ளிட்ட பிரிவிகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்ய டெல்லி சிபிஐ நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது
 
இந்நிலையில், இதுபற்றி கருத்துக்கூறிய அன்புமணி ராமதாஸ் “நான்
 
எந்த தவறும் செய்யவில்லை என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.