1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 20 மே 2016 (21:27 IST)

தேர்தலை நடத்தாவிட்டால் அறப்போராட்டத்தில் ஈடுபடுவேன் : கருணாநிதி அதிரடி

அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் தேர்தலை உடனடியாக நடத்தாவிட்டால் நான் அறப்போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.


 

 
தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களார்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக கூறி, தமிழக தேர்தல் கமிஷன் தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் கடந்த 12ஆம் தேதி நடக்க இருந்த தேர்தலை நிறுத்தியது.
 
மேலும், அந்த இரண்டு தொகுதிகளிலும் வருகிற 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்னும் மூன்று வாரங்களுக்கு அந்த தொகுதிகளில் தேர்தல் நடத்துவதை தேர்தல் ஆணையம் தள்ளி வைத்துள்ளது.
 
இந்நிலையில் இதுபற்றி பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த கருணாநிதி “ தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு ஆதரவாகவே செயல்படுகிறது. தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தலை நிறுத்தி, திமுகவிற்கு எதிராக சூழ்ச்சி செய்கிறார்கள். 
 
அங்கு தேர்தலை உடனடியாக நடத்தாவிட்டால் நானே அறப்போராட்டத்தில் ஈடுபடுவேன்” என்று அவர் தெரிவித்தார்.