1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 18 டிசம்பர் 2014 (13:37 IST)

ஆபாசப் படம் பார்த்ததால் மாணவியை கற்பழிக்க முயன்றேன் - மாணவன் வாக்குமூலம்

மடிக்கணினியில் ஆபாச படம் பார்த்து வந்ததாலும், அந்த படத்தில் உள்ளது போல் மாணவியை கற்பழிக்க முயன்றேன் என்று மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவன் வாக்குமூலம் அளித்துள்ளான்.
 
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பத்தை அடுத்த காங்குப்பம் கிராமத்தை சேர்ந்த கிருத்திகா என்பவர் மாச்சனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 15-ந் தேதி காங்குப்பம் அருகே உள்ள மாந்தோப்பில் மாணவியின் உடல் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையிலும், ஆடைகள் அவிழ்ந்த நிலையிலும் பிணமாக கிடந்தாள்.
 
இது குறித்து கே.வி.குப்பம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கிருத்திகா படித்த அதே பள்ளியில் படிக்கும் அதே கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன் காணாமல் போனது தெரியவந்தது. நேற்று அதிகாலை தனிப்படையினர் அந்த மாணவனை பிடித்து கைது செய்து குடியாத்தம் கொண்டுவந்து விசாரித்தனர்.
 
அப்போது அவன் அளித்துள்ள வாக்குமூலத்தில், நண்பர்களுடன் சேர்ந்து செல்போன் மற்றும் மடிக்கணினியில் ஆபாச படம் பார்த்ததால், அந்த படத்தில் உள்ளது போல் உறவு கொள்ளும் எண்ணத்தில் மாணவியை ஏமாற்றி அழைத்து சென்றபோது இந்த விபரீத செயலில் ஈடுபட்டதாக கூறியுள்ளான்.
 
மேலும் அவன் கூறிகையில், ‘திங்கட்கிழமை மதியம் பள்ளி முடிந்து சென்ற கிருத்திகாவை வலுக்கட்டாயமாக ஒரு தோப்புக்குள் அழைத்து சென்றேன். அங்கு மாணவியை மிரட்டி ஆடைகளை அவிழ்க்க சொல்லி தவறாக நடக்க முயன்றேன்.
 
அப்போது அவள் சத்தம் போடவே கழுத்தை நெரித்தேன். இதனால் அவள் மயங்கி கீழே விழுந்தாள். உடனே மாணவியின் துப்பட்டாவை எடுத்து கழுத்தை இறுக்கினேன், அவள் தலையில் கட்டியிருந்த ரிப்பனை அவிழ்த்து கை, கால்களை கட்டினேன்.
 
மேலும் பாட்டிலால் தலையில் அடித்தும், நெஞ்சிலும் கிழித்தேன். இதனால் அவள் இறந்துவிட்டாள். பின்னர் மாணவியின் கொலுசு, சைக்கிளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டேன்’ என்று அவன் அந்த விசாரணையில் கூறியுள்ளான்.