1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Modified: வெள்ளி, 29 ஜூலை 2016 (09:24 IST)

சிறையிலிருந்து வந்ததுவிட்டேன் - பழ.கருப்பையா மகிழ்ச்சி

சிறையிலிருந்து வந்ததுவிட்டேன் - பழ.கருப்பையா மகிழ்ச்சி

அ.தி.மு.க. சார்பில் கடந்த 2011 சட்டசபைத் தேர்தலில் சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பழ.கருப்பையா.


 


இவர் ‘துக்ளக்' பத்திரிகை ஆண்டு விழாவில் பங்கேற்று பேசியபோது அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க.வின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். இதை தொடர்ந்து, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அக்கட்சி எம்.எல்.ஏ பழ.கருப்பையா நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா அறிவித்தார்.

இதையடுத்து, அதிமுக முன்னாள் சட்டசபை உறுப்பினர் பழ.கருப்பையா, ஜூலை 20-ந்தேதி திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து, அவரது முன்னிலையில் அக்கட்சியில் தம்மை இணைத்துக்கொண்டார். இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், அதிமுக திராவிட கழகமில்லை எனவும், அதிமுகவில் இருந்து வெளியேறியது சிறையிலிருந்து வந்தது போல உள்ளதாக பழ.கருப்பையா தெரிவித்துள்ளார்.