1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 28 பிப்ரவரி 2018 (18:15 IST)

கணவன் கொடுமையால் தற்கொலை செய்த பெண்: வீடியோவால் பரபரப்பு

வீடியோ வெளியிட்டும் யாரும் காப்பாற்ற வராததால் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
வேலூர் திருபத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை சேர்ந்த சத்யா என்ற பெண், தன்னை கணவரிடமிருந்து காப்பாற்ற கோரி  வீடியோ ஒன்றை வெளியிட்டார்,  அந்த வீடியோவில் முகம், உடம்பில் ரத்த காயங்கலுடன் சத்யா இருந்தார். தனது கணவர் தன்னையும் தனது குழந்தையும் கொடுமை படுத்துவதாகவும். அவரிடம் நாங்கள் நரக வாழ்க்கை வாழ்வதாகவும், எங்களை யாராவது வந்து காப்பாற்றுங்கள் என கண்ணீர் மல்க பேசியிருந்தார்.
 
இந்நிலையில் சத்யா கடந்த 25ஆம் தேதி வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். ஆனால், அவர் வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது. இந்த வீடியோவை பார்த்தவர்கள் சத்யாவின் கனவரை கைது செய்யுமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.