1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 17 அக்டோபர் 2019 (13:13 IST)

தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் மழை..

தமிழகத்தில் பருவமழை தொடங்கிய நிலையில், கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில், நேற்று கனமழை இரவிலிருந்து கனமழை பெய்து வரும் நிலையில், தற்போது சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் மேலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

மேலும் விழுப்புரம், கடலூர், நீலகிரி, தூத்துக்குடி, நெல்லை, உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியுள்ளார். இந்நிலையில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.