1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 20 மே 2019 (09:25 IST)

செருப்பு வீசியவருக்கு பொன்னாடை? எச்.ராஜாவின் கேவலமான செயல்!

பிரச்சாரத்தின் போது கமல் மீது செருப்பு வீசிய நபருக்கு பொன்னாடை போர்த்தி மகிழ்வித்துள்ளார் எச்.ராஜா. 
 
திருப்பரங்குன்றம் தோ்தல் பிரசாரத்தின் போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவா் பெயா் நாதுராம் கோட்சே என்று கமல் பேசியதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தது. இந்த எதிர்ப்பால் பிரச்சாரத்தை ரத்து செய்த கமல் இரண்டு நாட்களுக்கு பின்னர் பிரச்சாரத்தை துவங்கினார். 
 
அப்போது பிரசார மேடையை நோக்கி காலணி வீசப்பட்டது. இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் காலணி வீசியவர் பாஜகவை சேர்ந்தவர் என தெரியவந்தது. இதனால், கமல் மீது காலணி வீசிய நபரை பாஜக தேசியச் செயலாளா் எச்.ராஜா தனது இல்லத்திற்கு அழைத்து அவருக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்துள்ளார். 
இந்த புகைப்படமும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. எச்.ராஜாவின் இந்த கேவலமான செயலை பலர் விமர்சித்து வருகின்றனர். 
 
ஆனால், சென்னையில் நடைபெற்ற திரைப்பட விழாவில் கலந்துக்கொண்ட கமல், ஒரு செருப்பு வந்துவிட்டது. இன்னொரு செருப்புக்காகக் காத்திருக்கிறேன். எனக்கு அந்த அருகதை உண்டு. என் மீது செருப்பு விசியவருக்குத்தான் அவமானமே தவிர எனக்கு அல்ல என பேசியது குறிப்பிடத்தக்கது.