1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (16:22 IST)

கொரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணியில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்...

தமிழகத்தில்  1,683 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையுடன் தமிழகம்  ஆறாவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், மக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்வதைத் தடுக்கவும் , கூட்டமாக சேர்ந்து விளையாடுவதைத் தடுக்கவும், சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டி போலீஸாரும் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கொரொனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், சுகாதாரத்துறையினர், வருவாய்த்துறையினருடன் இணைந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட அரசுப் பள்ளி  ஆசிரியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.