வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Bharathi
Last Modified: புதன், 23 செப்டம்பர் 2015 (12:15 IST)

புதிய இரு சக்கரவாகனம் வாங்குபவர்களுக்கு 2 தலைக்கவசம் வழங்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்

புதிய இரு சக்கரவாகனம் வாங்குபவர்களுக்கு மோட்டார் சைக்கிளை தயாரித்த நிறுவனமே 2 தலைக்கவசங்களை வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.



இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். கிருபாகரன் முன்பு இன்று நடைபெற்றது. அப்போது தீர்ப்பை வாசித்த நீதிபதி, " புதிய இரு சக்கர வாகனங்களை வாங்குபவர்களுக்கு, மோட்டார் சைக்கிளை தயாரித்த நிறுவனமே 2 புதிய தலைக்கவசங்களை வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

"மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்களால் வழங்கப்படும் தலைக்கவசங்கள் இந்திய தரக் கட்டுப்பாட்டு சான்றிதழை பெற்றுள்ளதா என்று மத்சிய அரசு உறுதி செய்ய வேண்டும்" என்று கூறினார்.