1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 30 ஜூலை 2016 (11:57 IST)

வகுப்பறையில் சாமியாடிய மாணவிகள்: அரசு பள்ளியில் பரபரப்பு

விருத்தாச்சலம் அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில், வகுப்பறையில் இருந்த மாணவிகள் திடீரென சாமி வந்து ஆடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


 
 
விருத்தாச்சலம் அருகே மு.பரூர் கிராமத்தில் நேற்று முன்தினம் செல்லியம்மன் கோயில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அப்போது பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
 
உடுக்கை, மேளதாளத்துடன் பக்தர்கள் பால்குடத்துடன் அரசு பள்ளி அருகே வந்த போது, அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் திடீரென எழுந்து நின்று சாமியாட ஆரம்பித்தனர். இதனை பார்த்த ஆசிரியர்களும், மாணவிகளும் ஆச்சரியமடைந்தனர்.
 
மாணவிகள் சாமியாடிய விஷயம் கோயில் பூசாரிக்கு தெரியப்படுத்தி உடனடியாக அவர் வரவழைக்கப்பட்டார். பள்ளிக்கு வந்த பூசாரி, மாணவிகளுக்கு திருநீர், குங்குமம் நெற்றியில் இட்டார். இந்த சம்பவத்தால் பள்ளியிலும், அப்பகுதியிலும் பரபரப்பு ஏற்பட்டது.