சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கு: வடமாநில இளைஞர்கள் 33 பேர் கைது
முசிறி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில், வடமாநிலங்களைச் சேர்ந்த 33 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள வேங்கை மண்டலம் என்ற இடத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுமியை தனியார் இரும்பு ஆலையில் பணியாற்றும் வடமாநில இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக புகார் எழந்தது.
இதில் பாதிக்கப்பட்ட சிறுமி துறையூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட வடமாநில இளைஞர்களை கைது செய்யக் கோரி, இரும்பு ஆலையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த பலாத்கார சம்பவத்தைக் கண்டித்து பொதுமக்கள், மூவானூரில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
அதைத் தொடர்ந்து இரும்பு ஆலையில் பணியாற்றிய 33 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.