1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 14 ஜனவரி 2018 (14:29 IST)

நாகையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தூக்கிட்டு தற்கொலை

நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே உள்ள ஆக்கூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் கண்ணன்(55). இவரது மனைவி குணசுந்தரி (50). கண்ணன் தம்பதியினருக்கு சரண்யா (22) மற்றும் சுகன்யா (20) ஆகிய இரு மகளகள் இருந்தனர். கண்ணன் மளிகை கடை நடத்தி வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மகள் சரண்யாவுக்கும், விக்னேஸ்வரன் என்பவருக்கும்  திருமணம் நடைபெற்றது. 
 
திருமணமாகி சில நாட்களிலே சரண்யாவுகும் அவரது கணவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக கடந்த சில மாதங்களாக சரண்யா அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். நேற்று விக்னேஸ்வரன் தனது மனைவி சரண்யாவை பார்ப்பதற்காக அவரது மாமனார் வீட்டுக்கு வந்து சென்றார்.
 
இந்நிலையில் நேற்று மாலை அக்கம் பக்கத்தினர் மளிகை பொருட்களை வாங்குவதற்காக கண்ணன் கடைக்கு சென்றனர்.  அப்போது கடை பூட்டியே கிடந்தது. பின்னர் சந்தேகமடைந்த அவர்கள், கண்ணன் வீட்டின் மேல் பகுதிக்கு சென்று பார்த்தனர். அங்கு வீட்டில் உள்ள 2 அறைகளில் கண்ணன், அவரது மனைவி குணசுந்தரி, மகள்கள் சரண்யா, சுகன்யா ஆகிய 4 பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்து செம்பனார்கோவில்  காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். 
 
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் 4 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வரதட்சனை கொடுமையின் காரணமாக கண்ணன் குடும்பம் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வரும் போலீசார் இது குறித்து சரண்யாவின் கணவர் விக்னேஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம்  விசாரணை நடத்தி வருகின்றனர்.