1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 8 ஜூலை 2015 (05:14 IST)

முன்னாள் மத்திய அமைச்சர் வீட்டில் 30 பவுன் நகை, ரூ 3 லட்சம் பணம் கொள்ளை

முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை வீட்டில் 30 பவுன் நகை,ரூ.3 லட்சம் பணம், ஒரு கிலோ வெளிப் பொருட்கள் கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
சென்னை, தாம்பரம் அருகே சேலையூர், மாடம்பாக்கம் பிரதான சாலையில் தேவராஜ் நகரில் முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை வசித்து வருகிறார்.
 
இந்த நிலையில், இவர் தனது குடும்பத்தினருடன் மதுராந்தகத்துக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்தது. படுக்கை அறை அருகே இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 30 பவுன் நகைகள், மூன்று லட்சம் ரொக்கப் பணம், ஒரு கிலோ வெள்ளிப் பொருட்கள் போன்றவற்றை கொள்ளயைடித்துச் சென்றது தெரிய வந்தது.
 
இது குறித்து, சேலையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் போரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
 
மேலும், பரங்கிமலை துணை ஆணையர் அவினாஷ்குமார், சேலையூர் உதவி ஆணையர் ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.