செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: ஞாயிறு, 29 மே 2016 (12:33 IST)

பயணிகள் ரயிலில் திடீர் தீ விபத்து - பயணிகள் அலறிஅடித்து ஓட்டம்

பயணிகள் ரயிலில் திடீர் தீ விபத்து - பயணிகள் அலறிஅடித்து ஓட்டம்

கரூரில் பயணிகள் ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பயணிகள் ரயிலில் இருந்து அலறிஅடித்து ஓட்டம் எடுத்தனர்.


 

கரூரிலிருந்து திருச்சிக்கு தினசரி பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று அதிகாலை 6 மணிக்கு வழக்கம் போல, கரூரில் இருந்து இந்த ரயில் திருச்சி நோக்கி புறப்பட்டுச் சென்றது. ரயில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே புலியூர் என்ற பகுதியில் அதன் இன்ஜின் பகுதியில் திடீர் விபத்து ஏற்பட்டது.
 
இதையடுத்து, வீரராக்கியம் என்ற இடத்தில் ரயில் நிறுத்தப்பட்டு, உடனே பயணிகள் அனைவரும் ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்டனர்.
 
தகவலறிந்து வந்த கரூர் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஒரு பெட்டியில் இருந்த இருக்கைகள் எரிந்து நாசமமடைந்து.
 
இந்த விபத்து காரணமாக கரூர் - திருச்சி மார்க்கத்தில் செல்லும் அனைத்து ரயில்களும் ஒரு மணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்டன.