1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 3 ஜனவரி 2017 (18:32 IST)

வயல் வெளியில் கூட நாங்கள் போராடக் கூடாதா? விவசாயிகள் குமுறல்

திருச்சி அருகே தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கால்நடைகளுடன் வயல்வெளியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


 

 
திருச்சி மாவட்டம் அருகே தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரியும் தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணியின் மாநிலத் தலைவர் புலியூர் நாகராஜன் தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது.
 
இவர்களின் போராட்டம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், போரட்டம் நடக்கக்கூடிய இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆடு மாடுகளை போராட்டத்துக்கு கொண்டு வரக்கூடாது என்றும், வறட்சியால் பாதிக்கப்பட்ட வயல்வெளியில் இறங்கி போராடக்கூடாது என்றும் எச்சரித்துள்ளனர். மேலும் மீறினால் கைது செய்வோம் என்றும் எச்சரித்தனர்.
 
இதையடுத்து எங்கள் வயலில் நாங்கள் போராடுவதை நீங்கள் கேட்க முடியாது என்று காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். அதோடு விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு கொடுக்காவிட்டால் அடுத்தகட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.