1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (12:19 IST)

எஸ்.பி.பி-க்கு என்ன ஆச்சு? மருத்துவமனைக்கு விரைந்த குடும்பத்தார்; போலீஸ் குவிப்பு!

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிகிச்சை பெறும் சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் வருகை தந்துள்ளனர். 
 
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ் பி பாலசுப்ரமண்யம் உடல்நிலை சீராக முன்னேறி வருவதாக அவர் மகன் எஸ் பி சரண் தெரிவித்திருந்த நிலையில், மீண்டும் அவர் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதியில் இருந்து கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சமீபத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்துவிட்டதாகவும் அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்ததாகவும் எஸ்பிபி சரண் அவர்கள் தெரிவித்திருந்தார். 
 
ஆனால் மீண்டும் அவர் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளதாவது, கடந்த 24 மணிநேரத்தில் எஸ்பிபியின் உடல் நிலை மோசமடைந்துள்ளது. அதனால் அதிகப்பட்ச உயிர்காக்கும் கருவிகளைக் கொண்டு , மருத்துவ நிபுணர்குழு சிகிச்சை அளித்து வருவதாக தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் எஸ்.பிபியின் நண்பரும் நடிகருமான கமல்ஹாசன் அவர் சிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு நேரடியாக சென்று நிலவரம் குறித்து கேட்டறிகிறார். இதனைத்தொடர்ந்து பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிகிச்சை பெறும் சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் வருகை தந்துள்ளனர். 
 
எஸ்.பி.பி. மகன் சரண், மகள் பல்லவி, மனைவி சாவித்திரி ஆகியோர் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அதோடு பாடகர் எஸ்.பி.பி. சிகிச்சை பெறும் எம்.ஜி.எம் மருத்துவமனையில் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.