வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : சனி, 25 அக்டோபர் 2014 (18:40 IST)

தமிழகத்துக்குள் சுப்பிரமணிய சாமி நுழையத் தடை விதிக்க வேண்டும் - ஈஸ்வரன்

தமிழகத்துக்குள் சுப்பிரமணிய சாமி நுழையத் தடை விதிக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கூறினார்.
 
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:–
 
பாஜக ஆட்சி மத்தியில் அமைந்த நாளிலிருந்து சுப்பிரமணியசாமி சிங்கள அரசுடன் கை குலுக்குவதும் அடிக்கடி இலங்கைக்கு சென்று அந்நாட்டு அதிபருடன் ஒட்டி உறவாடுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.
 
இவரது ஒவ்வொரு நடவடிக்கையும் தமிழக நலன்களுக்கு எதிராகவே உள்ளது. இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த ராஜபட்சேவுக்கு ஆதரவாக சுப்பிரமணியசாமி கருத்து கூறி வருகிறார். தமிழக மீனவர்களின் படகுகளை நான்தான் பறிமுதல் செய்ய சொன்னேன் என்று கூறியவர்.
 
இப்போது இலங்கை அதிபர் ராஜபட்சேவுக்கு இந்தியா பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அவர் கூறி இருப்பது உச்சக்கட்டம். இதை பொறுத்துக்கொள்ள முடியாது.
 
மீனவர் பிரச்சனையை தீர்க்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. அது பயன் பெறக்கூடாது என்பதற்காக சுப்பிரமணியசாமி செயல்பட்டு வருகிறார்.
 
தமிழர்களுக்கு எதிராகவும் தமிழக நலனுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வரும் சுப்பிரமணிய சாமியை தமிழகத்துக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும்.
 
இதனை அரசு செய்யா விட்டால் மக்கள் இதனை செய்வார்கள் என்று அவர் கூறி உள்ளார்.