வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: செவ்வாய், 13 அக்டோபர் 2015 (22:26 IST)

மின்துறை ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் தீபாவளி கருணைத் தொகை வழங்க விஜயகாந்த் கோரிக்கை

தமிழகத்தில் உள்ள மின்துறை ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் தீபாவளி கருணைத் தொகை வழங்க வேண்டும் என தேமுதிக கோரிக்கை விடுத்துள்ளது.
 

 
இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
தமிழகத்தில் மின்சார உற்பத்தி நிலையங்களில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களில் சிலருக்கு மட்டும் தமிழக அரசு தீபாவளி கருணைத் தொகை வழங்கியுள்ளதாகவும், பலருக்கு தீபாவளி கருணைத் தொகை வழங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இது போன்ற மனித நேயம் இல்லாமல் அதிமுக அரசு நடந்து கொள்வதை வன்மையாக கண்டிக்கிறேன்.
 
தொழிலாளர்களில் வேண்டியவர், வேண்டாதவர் என்று பார்க்காமல் அனைத்து ஒப்பந்த தொழிலாளருக்கும் பாரபட்சமின்றி தீபாவளி கருணைத் தொகையை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும்.
 
மின் உற்பத்தி நிலையங்களில் பணியாற்றும் அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்யாவிட்டால் அரசுக்கு எதிராக பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.