1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Updated :நாகர்கோவில் , புதன், 6 மார்ச் 2024 (09:43 IST)

பாஜகவின் முக்கிய பிரமுகர்கள் 16.பேர்கள் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது அமைச்சர் ரெகுபதி

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரெகுபதி,  நாகர்கோவிலில் செய்தியாளர்கள் சந்தித்து பேசினார் அப்போது அவர் பேசியது:
 
இந்தியாவிலேயே கஞ்சா பெயரிடப்படாத மாநிலம் தமிழ்நாடு.
 
தமிழ்நாட்டில் பாஜகவில் இருக்கும் முக்கிய பிரமுகர்கள் 16-பேர்கள் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
குஜராத் மாநிலத்தில் தான் போதைப் பொருள் புழக்கம் அதிகமாக உள்ளது.
 
தமிழ் நாடு அமைதிப் பூங்காவாக திகழ்கிறது.
 
பொய்யான காரணங்களைக் கூறி குழப்பத்தை ஏற்படுத்த முடியாது 
 
செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்காததற்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையே காரணம் , என சட்ட அமைச்சர் ரெகுபதி  தெரிவித்தார்.