வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 9 மே 2017 (07:17 IST)

கிராம சபை தீர்மானத்திற்கு ஏதிராக மதுக்கடைகள் திறக்ககூடாது: சென்னை ஐகோர்ட் அதிரடி

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. குறிப்பாக சுப்ரீம் கோர்ட் உத்தரவு காரணமாக நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகளை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக ஊருக்குள் டாஸ்மாக் கடைகளை ஆரம்பிக்க முயற்சிக்கும் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களின் எதிர்ப்பு மிக அதிகமாக உள்ளது.



 


இந்நிலையில் கிராம சபைகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஏதிராக மதுக்கடைகளை திறக்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட் அதிரடி தடை விதித்துள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்லாணாற்.

இந்த தீர்ப்பில் நீதிபதிகள் மேலும் கூறும்போது, "கிராம சபைகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஏதிராக மதுக்கடைகளை திறக்கக்கூடாது .மேலும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள் மீது, எந்தவித தாக்குதலிலும் காவல்துறை ஈடுபடக்கூடாது " என்று உத்தரவிட்டனர்.