வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahalakhsmi
Last Modified: ஞாயிறு, 3 மே 2015 (10:50 IST)

கூட்டணி குறித்து தற்போது கூற இயலாது: மு.க.ஸ்டாலின்

பொதுதேர்தல் கூட்டணி குறித்து தற்போது எதுவும் கூற முடியாது தேர்தல் நேரத்தில் தான் பரீசிலிக்க படும் என தி.மு.க பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
 
குன்னூரில் நடைபெற்ற கல்வி உதவித்தொகை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்டாலின் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். பேட்டியில் தேர்தல் குறித்து ஸ்டாலினடம் கேள்விகள் கேட்கப்பட்டது. இதுகுறித்து ஸ்டாலின் கூறுகையில், வருகின்ற பொதுதேர்தலில் தி.மு.க கண்டிப்பாக ஆட்சியை கைப்பற்றும் என்றார். 
 
மேலும் கூட்டணி குறித்து கேட்ட போது, அதனை தேர்தல் நேரத்தில்தான் சொல்ல முடியும் என்றார்.  மேலும் வேளாண்மை அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.