வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வியாழன், 2 ஏப்ரல் 2015 (10:59 IST)

தாம்பரம் அருகே திமுக பிரமுகர் வெட்டிக் கொலை

தாம்பரத்திற்கு அருகேயுள்ள நடுவீரப்பட்டு பகுதியில் திமுக பிரமுகரை மர்மநபர்கள் சரமாரியாக வெட்க்க் கொலை செய்தனர்.
 
தாம்பரத்தை அடுத்த நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் கஜா (எ) கஜேந்திரன். அவருக்கு வயது 46. இவர் நடுவீரப்பட்டு ஊராட்சி திமுக அவை தலைவர். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு ஹரிகரன் என்ற மகனும், சங்கீதா, சத்யா ஆகிய மகள்களும் உள்ளனர்.
 
கஜேந்திரன் தினமும் அதே பகுதியில் உள்ள அவ்வை தெருவுக்குச் சென்று, தன்னிடம் வேலை பார்ப்பவர்களை சந்தித்து, அவர்களை ஒவ்வொரு இடத்துக்கு அனுப்பி வைப்பது வழக்கம். அதன்படி, நேற்று காலை இவர் பைக்கில் அவ்வை தெருவுக்கு சென்றார்.
 
அப்போது, ஊழியர்களுக்கு வேலையை கொடுத்து, அந்தந்த பகுதிக்கு அனுப்பினார். அப்போது, 3 இருசக்கர வாகனங்களில் அங்கு வந்த 6 பேர், திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கஜேந்திரனை சரமாரியாக வெட்டினர். இதனால் அவர் துடிதுடித்தபடி ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
 
இதைத் தொடர்நது, அப்பகுதி மக்கள் ஓடிவந்தனர். இதனால், மர்ம நபர்கள் அங்கிருந்து, தப்பிச் சென்றுவிட்டனர். இதையடுத்து பொதுமக்கள், கஜேந்திரனை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
 
இதைத் தொடர்நத், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சிபுரம் எஸ்பி விஜயகுமார், ஸ்ரீபெரும்புதூர் டிஎஸ்பி ஜெயக்குமார், மணிமங்கலம் காவல்துறை ஆய்வாளர் ஐயனாரப்பன் ஆகியோர் இது குறித்து விசாரணை நடத்திதனர். இது குறித்து சோமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
 
இந்நிலையில், இந்த கொலை தொடர்பாக 4 பேர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.