1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 18 பிப்ரவரி 2017 (11:39 IST)

தன்மான சிங்கம் என கோசமிட்ட திமுகவினர்: கையெடுத்து கும்பிட்ட ஓபிஎஸ்

தமிழக முதல்வராக தேந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க, தற்போது தமிழக சட்டசபை கூடியுள்ளது.


 

சட்டசபை கூடியதும், நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்மொழிந்தார். அப்போது ரகசிய வாக்கெடுப்பு நடக்க வேண்டும் என ஓ.பி.எஸ் அணியினர் கோரிக்கை வைத்தனர். அவர்களுக்கு ஆதரவாக திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் கோஷமிட்டு வருகின்றனர். எனவே, சட்டசபையில் கடுமையான அமளி ஏற்பட்டுள்ளது.

அவையில் ஓ பன்னீர்செல்வம் பேச முயன்றபோது திமுக உறுப்பினர்கள் தன்மான சிங்கம் ஓபிஎஸ் வாழ்க என்று கோசமிட்டனர். இதனைக் கேட்டு ரசித்த ஓபிஎஸ் தனது கைகளை கூப்பி உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார்.