வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: புதன், 10 பிப்ரவரி 2016 (22:40 IST)

ஆட்சி மாற்றத்திற்கு வாருங்கள்: தொண்டர்களுக்கு விஜயகாந்த் அழைப்பு

ஆட்சி மாற்றத்திற்கு வாருங்கள்: தொண்டர்களுக்கு விஜயகாந்த் அழைப்பு

காஞ்சி குலுங்கட்டும், காலம் கனியட்டும், ஆட்சி மாறட்டும் என்று தனது தொண்டர்களுக்கு விஜயகாந்த் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
 

 
இது குறித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது தொண்டர்களுக்கு, எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-
 
கடந்த 2005 ஆம் ஆண்டு தேமுதிக எனும் அரசியல் இயக்கம் துவக்கப்பட்டு தமிழக மக்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
 
நமது இயக்கத்தின் சார்பில் பல மாநாடுகளை நாம் நடத்தி இருந்தாலும் ஒவ்வொரு மாநாடும் அந்தந்த காலகட்டத்தில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளன.
 
அந்த வரிசையில் வரும் 20 ஆம் தேதி காஞ்சிபுரம் வேடல் என்ற இடத்தில் துணிந்திடு, தவறுகளை களைந்திடு, புதிய மாற்றத்துக்கான ஆரம்பம் என்ற லட்சியத்தோடு திருப்புமுனை மாநாடாக  நடைபெற உள்ளது.
 
எனவே, காஞ்சி குலுங்கட்டும், காலம் கனியட்டும், ஆட்சி மாறட்டும் நாம் அனைவரும் ஒன்றிணைவோம்,  வென்றிடுவோம் என அழைப்பு விடுத்துள்ளார். இந்த மாநாட்டில் தேர்தல் கூட்டணி குறித்து விஜயகாந்த் அறிவிக்க உள்ளார்.