திண்டுக்கல் ஐ.லியோனிக்கு கொலை மிரட்டல்
திமுக பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, திமுக சார்பில், சென்னை மாநகரக் காவல்துறையிடம் அளித்த புகாரில் கூறியுள்ளதாவது:-
கடந்த ஜனவரி 7 ஆம் தேதி அன்று மாலை திருவண்ணாமலை நகரத்தில், திமுக சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டம் முடிந்ததும், பாமகவைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர், பல்வேறு செல்போன் எண்கள் மற்றும் வாட்ஸ்-அப் மற்றும் ஃபேஸ்புக் மூலம், திண்டுக்கல் ஐ.லியோனியையும், அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனவே, திண்டுக்கல் ஐ.லியோனிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.
இந்த மனுவை மீது விசாரணை நடத்த மத்திய குற்றப் பிரிவு துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.