வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 8 அக்டோபர் 2015 (00:18 IST)

சென்னையில் டெங்கு காய்ச்சல் - 2 வயது பெண் குழந்தை பலி

சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு 2 வயது பெண் குழந்தை பலியான சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை ராயப்பேட்டை மேதி உசேன் அலிகான் தெருவை சேர்ந்த முரளி - ராமலட்சுமி தம்பதிகளுக்கு பிரகதா என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது.
 
இந்த குழந்தைக்கு கடந்த இரு நாட்களாக கடும் காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து பிரகதாவை அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். டாக்டர்கள், அந்த குழந்தைக்கு மருத்துவ சோதனை செய்த போது, அந்த குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் தாக்கி இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இந்த நிலையில், குழந்தை பிரகதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தாள்.
 
மேலும், சென்னையில் குழந்தைகள் சிலருக்கு டெங்கு காய்ச்சல் தாக்கியுள்ளது.  அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
 
டெங்கு காய்ச்சலால் காரணமாக சென்னைவாசிகள் பெரும் பீதி அடைந்துள்ளனர். எனவே, மக்களின் அச்சத்தைப் போக்கு அரசு விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.