1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 4 செப்டம்பர் 2017 (13:57 IST)

தினகரனுக்கு அதிகரிக்கும் ஆதரவு ; உத்தரவிட்ட டெல்லி ; அதிர்ச்சியில் எடப்பாடி

அதிமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவு அதிகரித்து வருவதால், டெல்லி தரப்பிலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு சில உத்தரவுகளை இட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


 

 
தன்னையும், சசிகலாவையும் அதிமுகவிலிருந்து ஒதுக்கி வைக்கும் முயற்சியில் ஒன்றிணைந்த அதிமுக அணி இறங்கியுள்ளதால், அதிருப்தியடைந்த தினகரன்  தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேரை பாண்டிச்சேரி சின்னவீராம் பட்டினத்தில் உள்ள விண்ட் ஃபிளவர் ரிசார்ட்டில் தங்க வைத்துள்ளார். அதன் பின் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 22 ஆகி விட்டது என செய்திகள் வெளியானது. 
 
அதேபோல், அவருக்கு இதுவரை 6 அதிமுக எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். அந்நிலையில், வேலூர் எம்.பி.செங்குட்டுவன் மற்றும் திண்டுக்கல் எம்.பி. உதயகுமார் ஆகியோரும் தினகரனுக்கு ஆதரவை தெரிவித்துள்ளனர். இதன் மூலம், தினகரனை அதிகரிக்கும் எம்.பிக்களின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.
 
இப்படி தொடர்ந்து தினகரனுக்கு ஆதரவு அதிகரித்து வருவதை டெல்லி தரப்பு ரசிக்கவில்லையாம். எனவே, சமீபத்தில் டெல்லி சென்ற முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ். ஆகியோரிடம் “தினகரனுக்கு ஆதரவாக உள்ள எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையை குறையுங்கள். அல்லது, அவரோடு சமாதானம் பேசி ஆட்சியை காப்பாற்றுங்கள். மாறாக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அது திமுகவிற்கு சாதகமாகவே அமையும்” எனக் கூறியுள்ளனர்.
 
இதனால் அதிர்ச்சியடைந்த ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி இதுபற்றி உடனடியாக ஆலோசனை நடத்தியதாகவும், தினகரன் தரப்பு கோரிக்கை சிலவற்றை ஏற்க முன் வந்ததாகவும் கூறப்படுகிறது.