வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : ஞாயிறு, 7 பிப்ரவரி 2016 (11:47 IST)

தமிழகத்திற்கு அன்புமணி ராமதாஸால் நல்ல காலம் வரப்போகிறது - ராமதாஸ்

தமிழகத்திற்கு அன்புமணி ராமதாஸால் நல்ல காலம் வரப்போகிறது - ராமதாஸ்

தமிழகத்திற்கு இன்னும் 2 மாதத்தில் அன்புமணி ராமதாசால் நல்ல காலம் வரப்போகிறது என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

 
பாமகவின் 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கையின் விளக்க பொதுக்கூட்டம் செய்யாறு சட்டமன்ற தொகுதியில் நடந்தது. கூட்டத்துக்கு முன்னாள் எம்.பி. துரை தலைமை தாங்கினார்.
 
கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மருத்துவர் ராமதாஸ், ”தமிழகத்திற்கு இன்னும் 2 மாதத்தில் அன்புமணி ராமதாசால் நல்ல காலம் வரப்போகிறது. தமிழகத்தினை 50 ஆண்டு காலம் திமுக மற்றும் அதிமுக ஆட்சி செய்து சீரழித்துள்ளனர்.
 
ஊழல் மற்றும் லஞ்சம் பெருகியுள்ளது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைச்சலுக்கு விலை நிர்ணயம் செய்யமுடிவில்லை. விவசாயத்திற்கு என தனி பட்ஜெட் போட சொல்லி மாறி, மாறி கூட்டணி வைத்த போது கேட்டும் இரண்டு கட்சிகளும் போடவில்லை.
 
கடந்த காலங்களில் தொண்டர்களாகிய உங்கள் பேச்சை கேட்காமல் இரண்டு கட்சிகளுடன் மாறி, மாறி கூட்டணி வைத்து தவறு செய்துவிட்டேன். பாமக இனி தனித்து தான் போட்டியிடும். இல்லையேல் இந்த கட்சியே வேண்டாம்” என்று கூறியுள்ளார்.