1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 28 ஜூலை 2016 (18:59 IST)

ராம்குமாருக்கு ஆகஸ்ட் 8-ஆம் தேதி போலீஸ் காவல்: நீதிமன்றம் உத்தரவு

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாருக்கு மேலும் ஒரு நாள் போலீஸ் காவல் விதித்து உத்தரவிட்டுள்ளது எழும்பூர் நீதிமன்றம்.


 
 
ஏற்கனவே ராம்குமாரை 3 நாள் காவலில் எடுத்த காவல்துறை, ராம்குமாரையும், பிலால் மாலிக்கையும் வைத்து விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் ராம்குமார் தான் கொலையை செய்ததாக பல தகவல்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வந்தது. நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நள்ளிரவில் அழைத்துச்செல்லப்பட்டு கொலை செய்ததை ராம்குமார் நடித்துக்காட்டியதாகவும் கூறப்படுகிறது.
 
இதனையடுத்து மீண்டும் ராம்குமாரிடம் விசாரணை நடத்த மேலும் ஒருநாள் போலீஸ் காவல் கோரி, எழும்பூர் நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
 
காவல்துறையினரின் இந்த மனு கடந்த வாரம் எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது தீர்ப்பு ஜூலை 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இன்று அளிக்கப்பட்ட தீர்ப்பில் ஆக்ஸ்ட் 8-ஆம் தேதி ராம்குமாரை போலீஸ் காவலில் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டது.