1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 4 மே 2018 (13:10 IST)

14 வயது சிறுமியின் கருவைக் கலைக்க நீதிமன்றம் அனுமதி

ரவுடியால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 14 வயது சிறுமியின் கருவைக் கலைக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ரவுடியால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 14 வயது சிறுமியின் கருவைக் கலைக்க அனுமதி கோரி குழந்தைகள் நலக்குழு உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது.
 
இதுகுறித்து மகப்பேறு மருத்துவர் கருத்து தெரிவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை டீன், குழந்தையின் கருவைகலைக்க ஒப்புதல் அளித்தார்.
இதனையடுத்து 14 வயது சிறுமியின் 18 வாரக் கருவை கலைக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.