திங்கள், 7 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 19 ஜனவரி 2024 (20:16 IST)

இறந்த குழந்தையின் சாம்பலை கற்களாக மாற்றியுள்ள தம்பதியர்

ash stones
அமெரிக்காவில் இறந்த குழந்தையின் சாம்பலை கற்களாக மாற்றியுள்ளனர் தம்பதியர்.

அமெரிக்கா நாட்டில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் அரியவகை நோய் பாதிப்பால் உயிரிழந்த 15 மாதக் குழந்தையின் சாம்பலை கற்களாக மாற்றறியுள்ளர் தம்பதியர்.

TBCD என்ற என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை பாப்பி, 9 மாதக் குழந்தையாக இருந்தபோது, அவருக்கு இந்த  நோய் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்தக் குழந்தை தற்போது உயிருடன் இல்லை. ஆனால், அரியவகை  நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 15 மாதக் குழந்தை பாப்பியின் சாம்பலை கற்களாக மாற்றி தங்களுடன் வைத்து கைல் – ஜேக் தம்பதியர் வாழ்து வருகின்றனர்.

இந்த கற்கள் குழந்தையின் நினைவாக வைத்திருப்பதாகவும் இந்தக் கற்கள் மூலம் பாப்பியுடன் இருப்பது போல உணர்வதாக தெரிவித்துள்ளார்.